திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆசிரியரை மாணவர்கள் மிரட்டிய மாதனூர் அரசு பள்ளியில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியர், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரியும் தாக்க முயன்ற மாணவர்கள், வீடியோ எடுத்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.