இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இதுகுறித்து முகிலன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடிப்பழக்கம் உள்ள முல்லைவேந்தன் தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் பைக் விபத்தில் சிக்கிய முல்லைவேந்தன் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததுடன் வீட்டில் அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு அவரது செல்போன் மாயமானது. அதை நான் தான் திருடியதாக கூறி தொடர்ந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அவரை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கடந்த 7ம் தேதி நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அண்ணனை அழைத்து கொண்டு ஒடப்பவிடுதி சென்றோம். அங்கு அனைவரும் மது குடித்தோம். அப்போது போதையில் இருந்த அண்ணன் முல்லைவேந்தனை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தினோம். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து விறகுக்கட்டையை வைத்து அவரை எரித்துவிட்டு தப்பியதாக அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து முகிலன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 3 பேரையும் இலுப்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி முகிலன், அனீஷ்வரனை புதுக்கோட்டை சிறையிலும், 17வயது சிறுவனை திருச்சி சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
The post செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம்: அண்ணனை கொன்று எரித்த தம்பி appeared first on Dinakaran.