சென்னை : தஞ்சையைச் சேர்ந்த ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா, பட்டீஸ்வரம், கும்பகோணம், உள்ளிட்ட பல பகுதிகளில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இவர் மீது 16 கொலை வழக்குகள் உள்ளது. இதனிடையே 2013ம் ஆண்டு கும்பகோணம் திப்பிராஜபுரம் அருகே சென்னியமங்கலத்தில் செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த நிலையில் கட்டை ராஜா தலைமறைவானார். தொடர்ந்து பல ஆண்டுகளாக தேடி வந்த போலீசார், கட்டை ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.