டெல்லி : டெல்லியில் நாடாளுமன்ற மொழி அலுவலக குழு கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழி அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார். வெவ்வேறு மாநில மக்களும் பேசி கொள்ளும் மொழியாக இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது ஒன்றிய அமைச்சரவையில் 70% அலுவல்கள் இந்தியிலேயே நடைபெறுவதாக கூறியுள்ளார். அலுவல் மொழியிலேயே அரசை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருப்பது இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.