ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிங்கு ராஜா, ராணி பாய் நினைவு மண்டபம் மற்றும் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாருக்கு சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் அலுவலால் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா வேலம் ஊராட்சியில் தமிழறிஞர் மு.வரதராசனாரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தையும், ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேசிங்கு ராஜா, ராணி பாய் நினைவு மண்டபத்தை செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் மற்றும் அலுவலால் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.