திருமலை : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் எஸ்.ஆர். புரம் அருகே 19 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்து மூன்று கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அதிரடிப்படை எஸ்.பி. சுந்தர ராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆர்.ஐ. சுரேஷ்குமார், ஆர்.எஸ்.ஐ. வினோத்குமார் தலைமையில் சித்தூர் கிழக்கு பிரிவு எஸ்.ஆர்.புரம் மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ரோந்து சென்றனர். அப்போது திங்கள்கிழமை காலை, எஸ்.ஆர்.புரம் மண்டலம் புத்தூர் மெயின் ரோடு அருகே உள்ள மண் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அதிரடிப்படையினரைப் பார்த்து தப்பியோட முயன்றனர்.