இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய 6 பேரை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த 6 பேர், பாஜ பிரமுகரின் கணவரை கொல்ல முயன்றதாக கூறி சரணடைந்தனர். விசாரணையில், அவர்களது பெயர் பிரசாந்த், பிரகாஷ், சீனிவாசன், சரவணன், ராகேஷ், கணேசன் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்து, கடந்த 2005ம் ஆண்டு சென்னை யானைகவுனியில் நெடுஞ்செழியன் எ ன்பவரை கொலை செய்தது தொடர்பாக பழிவாங்க கொலை முயற்சி நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சீனிவாசனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய 6 பேர் சரண் appeared first on Dinakaran.