சிதம்பரம்:கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்து வருபவர் கிருஷ்ணசாமி தீட்சிதர்(62). இவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோயிலில் பிரசாதம் பெற்றுள்ளார். அப்போது அவரை சக தீட்சிதரான ரவி செல்வம் தாக்கி காயப்படுத்தி, பூணூலையும் அறுத்ததாக கூறப்படுகிறது.அவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்படி சிதம்பரம் நகர போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.