கோவை வடக்கு அம்மன் கே.அர்ச்சுனன் (அதிமுக) பேசும்போது, ‘‘மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கம்பிவட ஊர்தி வசதி செய்து தர வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:கம்பிவட ஊர்தி அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று அறிக்கை தரப்பட்டிருக்கிறது.