மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு உரிய இழப்பீடு வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1,40,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இதில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி செடிகளை முறையாகணக்கெடுக்க வேண்டும். மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தகவல் வெளிவந்திருப்பதால் பருத்தி சாகுபடி மேலும் பாதிக்கப்பட்டால், அதனையும் சரியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு அறிவிக்க வேண்டும். எனவே தமிழக அரசு டெல்டா மாவட்ட பகுதிகளில் மழையால் வீணாகியுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

The post மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு உரிய இழப்பீடு வழங்க ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: