ஓபிஎஸ் அணியில் இருந்து விலகலா? – கு.ப.கிருஷ்ணன் பதில்

திருச்சி: பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவுக்கு ஓபிஎஸ்சுடன் அவரது ஆதார வாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வராதது குறித்து பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு ‘அவர் வருவார்.., வருவார்…’ என கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று மாலை திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், நான் மதுரைக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றதால் ஓபிஎஸ்சுடன் கலந்து கொள்ள இயலவில்லை. என்று தெரிவித்தார். இருவருக்கும் இடையில் பிரச்னை எழுந்துள்ளதால், கு.ப.கிருஷ்ணன் ஓபிஎஸ் அணியில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் தொண்டர்கள் மத்தியில் ஒரு கருத்து உலா வருகிறது.

The post ஓபிஎஸ் அணியில் இருந்து விலகலா? – கு.ப.கிருஷ்ணன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: