டெல்லி: கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 5 மாணவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் இந்தியாவில் டொராண்டோ தேவையான அனைத்து ஆதரவையும், உதவிகளையும் வழங்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறினார்.