குன்னூர்: குன்னூர் அருகே கேத்தி பாலாடா பகுதியில் விவசாய நிலத்தில் திடீரென 10 அடி வரை பூமி உள்வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் அதிகளவில் மலைக்காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தேவைக்காக கேத்தி பாலாடா சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.