தர்மபுரி: நகர்ப்புற உள்ளாட்சித் ேதர்தலில், தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 176 பேர் களத்தில் உள்ளனர். இதில், 25வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் முல்லைவேந்தன் மனைவி சத்யாவும், அதிமுக சார்பில் லலிதா ஆகிய 2 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிடுவதாக முதலிலேயே அறிவித்த பாமக இந்த வார்டுக்கும் வேட்பாளரை அறிவித்தது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள அக்கட்சியின் சமூகத்தினரை கருத்தில் கொண்டே, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி தனியாக போட்டியிடுகிறது.பாமக சார்பில் 25வது வார்டுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.