திருவனந்தபுரம்: நல்லபாம்பு கடித்து உயிருக்கு போராடிய வாவா சுரேசுக்கு 65 விஷமுறிவு மருந்து பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை தேறிவிட்டது. பிரபல பாம்புப்பிடி மன்னனான வாவா சுரேஷை நல்லபாம்பு கொத்தியதில் உயிருக்கு போராடி வந்தார். கோட்டையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொதுவாக நல்லபாம்பு விஷத்தை அவ்வளவாக கடிப்பவர்கள் மீது செலுத்தாது; ஆனால் வாவா சுரேஷை கடும் கோபத்துடன் கடித்ததால் விஷம் அதிகளவு அவரின் உடலில் செலுத்தியுள்ளது. இதனால் அவரின் ரத்தத்தில் விஷம் நன்றாக கலந்து விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவருக்கு தொடர்ந்து விஷமுறிவு மருந்து பாட்டில்கள் ஏற்றப்பட்டன. சாதாரணமாக 25 பாட்டில்கள் ஏற்றினாலே விஷம் முறிந்துவிடும். ஆனால் வாவா சுரேஷின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், தொடர்ந்து விஷமுறிவு மருந்து ஏற்றப்பட்டுக்கொண்டே இருந்தது.