முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைப்பு

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைத்தது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 330 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கை விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ஜிஎஸ்டி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன் ஆஜராக வேண்டி இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அமலாக்கத்துறை கோரிக்கைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது; அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று ஆஜராகாததால், அவரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்றத்துக்கு வருகின்ற 20 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை கோடைக்கால விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 10க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: