புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய நீர் ஆணையத்தின் துணை இயக்குனர் நேற்று நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் அணையை பலப்படுத்த தமிழக அரசுக்கு நீர் வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எந்த வகையிலும் கேரள அதிகாரிகள் தமிழக அரசை தொந்தரவு செய்யக்கூடாது. அணையை பலப்படுத்த, முல்லைப் பெரியாறின் துணை அணையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு கேரள அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.