ஓட்டலில் தீ 6 பேர் பலி

பாட்னா: பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று திடீரென தீப்பற்றியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி 3 பெண்கள் உட்பட 6பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மேலும் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஓட்டலில் தீ 6 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: