செல்சுரா: மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எம்.எல்.ஏ. மகன் உள்ளிட்ட 7 மாணவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். சங்வி பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் விருந்து ஒன்றில் பங்கேற்றபின் வரதா நகரை நோக்கி நேற்று இரவு ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த வாகனம் இரவு 11:30 மணிக்கு செல்சுரா என்ற இடத்தின் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே பாய்ந்துள்ளது. பாய்ந்த வாகனத்தில் வேகம் பலமுறை உருண்டதால் அப்பளம் போல அந்த கார் நொறுங்கியது.