ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் ஸ்டன்ட்: டெல்லி வாலிபர், இளம் பெண் கைது

புதுடெல்லி: டெல்லியில் ஸ்பைடர்மேன் உடை அணிந்து ஆபத்தான முறையில் பைக்கில் சாகசம் செய்த ஒரு வாலிபரும், இளம் பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர். தென் மேற்கு டெல்லியில் உள்ள துவாரகாவின் சாலைகளில் ஸ்பைடர்மேன் உடை அணிந்த இளைஞர் ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் சாகசம் செய்தார். நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் இளைஞர் சாகசம் செய்தார். அதன் பின்னர் இளம் பெண் ஒருவரும் வாலிபருடன் பைக்கில் சென்றார். அந்த பெண்ணும் ஸ்பைடர் உமன் உடை அணிந்து இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இதையடுத்து, டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.ஆபத்தான முறையில் முக்கிய சாலையில் சாகசம் நிகழ்த்திய ஜோடி நஜப்காரை சேர்ந்த ஆதித்யா(20) மற்றும் அஞ்சலி(19) என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மோட்டார் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் ஸ்டன்ட்: டெல்லி வாலிபர், இளம் பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: