டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு!

டெல்லி: டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை என துணைவேந்தர் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் அறிவித்துள்ளார். எந்தவித ஆடை அணிய வேண்டும் என்பது மாணவிகளின் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. கல்வி நிலையங்கள் ஆடைக் கட்டுப்பாடு விதிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை. உணவு, உடை ஆகியவை ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம், கல்வி நிறுவனங்கள் உணவு, உடை பற்றி விதிகள் வகுக்கக் கூடாது. இந்தியை தேசிய மொழியாக்குவது பற்றிய கேள்விக்கு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என்பதை, தான் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

 

The post டெல்லி ஜவஹர்லால் பல்கலை. மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வரத் தடையில்லை: துணைவேந்தர் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: