திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனுக்கு (98) கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவரது மகன் அருண்குமார் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அருண்குமார் தனது முகநூலில் கூறியிருப்பதாவது: என்னுடைய தந்தை வி.எஸ். அச்சுதானந்தனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக என்னுடைய தந்தை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கொரோனா பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பார்வையாளர்கள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்காமல் மிகவும் கவனமாக இருந்தோம்.