சின்னாளபட்டி : கன்னிவாடி அருகே துணை மின்நிலையத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே ஆலந்தூரான்பட்டியில் துணை மின்நிலையம் உள்ளது. இங்குள்ள டிரிப்பர் பழுதடைந்ததால் ேநற்று காலை துணை மின்நிலையத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஆயில் அதிக வெப்பமாகி வெடித்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள், டிரான்ஸ்பார்மில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையிலான பணியாளர்கள் மின்விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.