மரகதலிங்கம் மீட்பு: முதல்வருக்கு ஆதீனங்கள் நன்றி

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள ஹார்விபட்டியில் தனியார் அறக்கட்டளையை நேற்று மதுரை ஆதீனம் தேசிக பராமாச்சாரியர், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் தர்மபுரம் ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பாரம்பரியமிக்க ஆதீனங்கள் பதினெட்டு உள்ளன. இதன் கீழ் கோயில்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு திருக்குவளையில் உள்ள ஆதீனத்தின் மரகதலிங்கம் காணாமல் போனது. தற்போது அதனை மீட்டு மீண்டும் பூஜைக்காக கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பாடுபட்ட தமிழக காவல்துறைக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: