பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அருகே ஜிசிஎஸ் கண்டிகையை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). அவர், நேற்று இறந்தார். இவரது இறுதி சடங்கு செய்ய சுடுகாடு அப்பகுதியில் இல்லை. இதனால் பொதுமக்கள், சடலத்தை அங்குள்ள பொது சாலையில் புதைக்க எடுத்து சென்றனர். இதையறிந்ததும், வருவாய்த்துறையினர் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர்.