பெரியகுளம்: பெரியகுளம் அருகே, 9 மாதங்களாக கும்பக்கரை அருவி திறக்கப்படாததால், விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அருவியில் குளிக்கவும், சுற்றிப்பார்க்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பான்மையோருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இந்நிலையில்,