திருவெறும்பூர்: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும் 75 இடங்களில் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளூர் பொதுமக்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி நேற்று துவங்கி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. நேற்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி காட்சி மூலம் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன்படி கான்பூரில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் கருவிகள் இந்தியா நிறுவனத்தின் (எ.டபுள்யூ.இ.ஐ.எல்) ஒரு அங்கமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் ஊழியர் கிளப்பில் கண்காட்சி துவங்கியது. இங்கு நவீன பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள் மற்றும் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால ஆயுதங்கள் முதல் நவீன கால ஆயுதங்கள் வரை இடம்பெற்றுள்ளது.