நெல்லை மாவட்ட மீனவர்கள் 9-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை: 1,500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தம்

நெல்லை: நெல்லை மாவட்ட மீனவர்கள் 9 நாளாக கடலுக்கு செல்லாததால் 1000கணக்கான படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மன்னார்வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 40முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, கூத்தன் குழி உள்ளிட்ட 10 மீனவ கிராம மீனவர்கள் 9வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதனால் சுமார் 1500 பைபர் படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

The post நெல்லை மாவட்ட மீனவர்கள் 9-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை: 1,500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரங்களில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: