இதற்காக கிராமத்தில் உள்ள மலையாளத்தார், நாகமுத்து, முத்துவேல் ஆகியோர் காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்து அபிஷேகத்தில் கலந்துகொண்டனர். இவர்கள் மூவரும் அங்காளம்மன், வர்ணமுத்து மாரியம்மன், இளங்காளியம்மன் ஆகியோர்களாக பாவிக்கப்பட்டு இந்த அபிஷேகம் ஐதீக முறைப்படி நடந்தது. இதன்படி மொட்டை அடிக்கப்பட்ட மூவரும் கோயில் முன்பு மேடையில் அமரவைக்கப்பட்டு எண்ணெய், வாசனை திரவியங்கள், பழ வகைகள், அபிஷேகப் பொருட்கள், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளால் ஒன்றன்பின் ஒன்றாக 108 அபிஷேகப் பொருட்களும் அவர்களின் தலையில் ஊற்றப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.
கடைசியாக பக்தர்களின் கையால் அரைக்கப்பட்ட மிளகாய் தூள் கரைசல் அவர்களுக்கு மூன்று கைகள் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் வாங்கி குடித்தவுடன், அவர்களின் தலையில் அக்கரைசல் ஊற்றப்பட்டது. அதனை அடுத்து வேப்பிலை கரைசல் ஊற்றப்பட்டு அபிஷேகம் நிறைவடைந்தது. பிறகு அவர்கள் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து செடல் உற்சவத்தை துவக்கி ஊர்வலம் வந்து அதன்பின் பக்தர்கள் அனைவரும் தீ மித்தனர். இதில் ஏராளமான உள்ளுர், சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் ஆரோவில் வாசிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post கோயில் திருவிழாவில் பக்தர்களின் தலையில் மிளகாய் கரைசல் ஊற்றி அபிஷேகம் appeared first on Dinakaran.