திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 262 குற்ற வழக்குகள் ஒரே நாளில் தீர்வு

திருத்தணி: திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் சுமார் 200 வழக்குகள் சமரச தீர்வுக்கு காணப்பட்டது. 32 மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1 கோடி 70 லட்சம் பெற்றுத்தரப்பட்டது. மேலும், 6 சிவில் வழக்குகள் சமரசம் செய்யப்பட்டது. வங்கி வழக்குகள் 11 பைசல் செய்யப்பட்டது. குற்ற வழக்குகள் 262 தீர்வு காணப்பட்டது. குடும்ப நல வழக்கு ஒன்றிற்கு சமரசம் செய்யப்பட்டு தம்பதிகள் சேர்த்து வைக்கப்பட்டனர். மொத்தமா ரூ.1 கோடியே 74 லட்சம் தீர்வு காணப்பட்டது.

Related Stories: