பள்ளிப்பட்டு: ஆந்திராவிலிருந்து மணல் கடத்தி தமிழக எல்லைப் பகுதியில் வீடுகளுக்கு அருகே பதுக்கி வைத்த 25 யூனிட் மணல் வருவாய்த்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் வகையில் மணல் குவாரிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் எம்.சாண்ட் கொண்டு கட்டுமானம் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் கட்டுமான பணிகளுக்கு மணல் எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி லாரிகளில் தமிழகத்திற்கு அதிக அளவில் கடத்திவந்து எல்லைப் பகுதிகளில் பதுக்கி வைத்து கடந்த சில மாதங்களாக விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன.