கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் மிதுனை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.