ஐஎன்எஸ் அக்ரானிக்கு தெற்கு கடற்படை கட்டளை அதிகாரி வருகை

கோவை :  கோவையில் உள்ள ஐஎன்எஸ் அக்ரானி தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி நிறுவனத்திற்கு தெற்கு கடற்படைக் கட்டளை அதிகாரி ஏ.கே.சாவ்லா நேற்று வந்தார்.

அப்போது அவர், மாலுமிகளின் கௌரவ மரியாதையை பெற்று கொண்டதுடன், ஐஎன்எஸ் அக்ரானியின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்தார்.  பின்னர் அக்ரானியில் “நொய்யல்” மற்றும் “பழமுதிர் தோட்டம்” நிலைய கழிவு மேலாண்மை ஆலையை திறந்து வைத்தார்.

பாதுகாப்பு சிவிலியன் ஊழியர்கள் உட்பட கடற்படை வீரர்களுடன் உரையாடியதுடன் இந்திய கடற்படையின் மாலுமிகளுக்கு தலைமைத்துவ மற்றும் மேலாண்மை திறன்களை வழங்குவது குறித்து  எடுத்துரைத்தார். தெற்கு மண்டல கடற்படை மனைவிகள் நலச்சங்க தலைவர் சபனா சாவ்லா, கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் “ஓயாசிஸ்” என்ற ஆரோக்கிய பூங்காவை திறந்து வைத்ததுடன் நிலையத்தின் அனைத்து  பெண்களுடனும் உரையாடினார்.

Related Stories: