புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பாஜக தேசிய செயற்கு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்தாண்டில் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல், சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு குறித்து ஆலோசித்தல் தொடர்பாக பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ெதாடங்கிய இந்த கூட்டம், இன்று மாலை வரை நடைபெற்றது. கொரோனா விதிகளைப் பின்பற்றி தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்ததால், பாஜக முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வந்து கலந்து கொண்டனர். டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.