புதுடெல்லி: சாலை விபத்துகள் குறைய வேண்டுமென்றால் பைலட்டுகள் போன்று லாரி டிரைவர்களுக்கு வேலை நேரம் நிர்ணயிக்க வேண்டும் என்று ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரி டிரைவர்கள் ஓய்வில்லாமல் வாகனத்தை ஓட்டி செல்வதால் நெடுஞ்சாலைகளில் கவனக்குறைவால் விபத்துகள் நிறைய நடக்கிறது. இதனால், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பயணிக்கும் விமான பைலட்டுகள் போன்று லாரி டிரைவர்களுக்கும் வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.