திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விமான விபத்துக்கு விமான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததே காரணம் என இறுதி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இடையே துபாயில் சிக்கி தவித்த 190 இந்தியர்களுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் நோக்கி வந்த போது இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. table talk runway என்றதாலும் விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமிட்டு விமானி இறுதியாக விமானத்தை தரையிறக்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று கோர விபத்து ஏற்பட்டது. இதில் விமானி உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.