வருசநாடு: கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி-குமணன்தொழு சாலையோரத்தில் உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுவதாக வாகன ஓட்டிகள் புகார் ெதரிவித்துள்ளனர்.கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டி கிராமத்திலிருந்து கோம்பைத்தொழு, குமணன்தொழு ஆகிய கிராமங்களுக்கு செல்ல சாலை உள்ளது. மேகமலை வனச்சரக அலுவலகம் அருகே குமணன்தொழு சாலையில் இருந்து மூலவைகை ஆறு மற்றும் தோட்டத்திற்கு செல்ல பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கரட்டுபட்டியில் இருந்து குமணன்தொழு வரையிலான பகுதியில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை உயர்த்தப்பட்டதால், பக்கவாட்டு பகுதிகள் மிகவும் பள்ளமாக உள்ளன.