கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு… குடும்பத்திற்காக வெளிநாடு சென்றவர் குடும்பத்தையே இழந்த சோகம்

செங்கல்பட்டு : சென்னை அடுத்த கல்பாக்கத்தில் சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதே போல் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வாயிலூர் பகுதியில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கார் திடீரென சாலையோர மரத்தில் மோதி அப்பளம் போல நொறுங்கியது/ காரில் இருந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), விக்னேஷ்(24), யுவராஜ்(26), மற்றொரு இளைஞர் உயிரிழந்தனர்.

நண்பர்கள் 5 பேரும் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு காரில் மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். வாயிலூர் பகுதியில் சென்ற போது, மாடு குறுக்கே வந்ததால் அதன், மீது மோதாமல் இருக்க காரை திருப்பி உள்ளனர். அப்போது சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதே போல் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிலாவட்டம் பகுதியில் முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

துபாய் செல்லும் தனது கணவர் அப்துல்லை வழியனுப்பி வைத்துவிட்டு, ஜெய்பினிதா என்பவர் தனது குழந்தைகளுடன் வீடு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்பினிஷா அவரது மகன்கள் மிஷால், அக்பர், பைசல் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.அவரது மற்றொரு மகன் அப்துல் படுகாயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு… குடும்பத்திற்காக வெளிநாடு சென்றவர் குடும்பத்தையே இழந்த சோகம் appeared first on Dinakaran.

Related Stories: