போதை பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜுஹு பகுதியில், பாலிவுட் நடிகர் அர்மான் கோஹ்லி (50) தன் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 1970 முதல் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர், தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துதல் மற்றும் சப்ளை செய்தல் தொடர்பாக, போதை பொருள் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் சென்றது. இதையடுத்து அவரது பங்களாவில் போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  

தொடர்ந்து போதை பொருள் கட்டுப்பாட்டு மையத்தின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே, பங்களாவில் இருந்த அர்மான் ேகாஹ்லியிடம் விசாரணை நடத்தினார். பிறகு அவரை கைது செய்து, போதை பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்களது ஜீப்பில் அழைத்து சென்றனர். பங்களாவில் நடந்த சோதனையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: