வெளிமணிப்பூரில் 4 வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். 2 வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தலால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்குப்பதிவு தடைபட்ட 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கூடுதல் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
The post வன்முறையால் வாக்குப்பதிவு நிறுத்தம்: கூடுதல் பாதுகாப்புடன் மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.