என்கவுன்டரில் நக்சல் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கிஸ்டாராம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் கோப்ரா படை பிரிவினர் காட்டுப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு வீரர்கள் மீது நக்சல்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் நக்சல் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் இருந்து நக்சலின் சடலம் மற்றும் அங்கிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post என்கவுன்டரில் நக்சல் பலி appeared first on Dinakaran.

Related Stories: