இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘‘ ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ஒன்றிய அரசு ரத்து செய்தது செல்லும் எனவும், அங்கு 2024 செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வந்த நிலையில், அதனை நாளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.
The post 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை appeared first on Dinakaran.