உச்ச நீதிமன்றத்தில் சி.ஏ தேர்வு தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: பட்டயக் கணக்காளர் தேர்வுகள் வரும் மே.8, 7,13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வு தேதியை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தேர்வுகள் நடக்கும் தேதிகளில் வாக்குப்பதிவு எதுவும் நடைபெறவில்லை. மேலும் சுமார் 4.36 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த விவகாரம் என்பதால், தேர்வை தள்ளி வைக்க முடியாது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post உச்ச நீதிமன்றத்தில் சி.ஏ தேர்வு தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: