ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தளபதி உட்பட 2 முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை நேற்று சுட்டு கொன்றது. ஜம்முவில் நம்பியன், மர்சர் என்ற வனப்பகுதிகள் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததால், நேற்று காலை அப்பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்கினர். இதற்கு ராணுவம் அளித்த பதில் தாக்குதலில், 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘‘துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவனான அபு சபிபுல்லா என்கிற லம்பு , சமீர் தர் என்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் சபிபுல்லா, ஜெய்ஷ் அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உறவுக்காரன்.