கோவையில் இருதய செயலிழப்பால் உயிருக்கு போராடி வரும் சிறுவனை காப்பாற்ற கிராம மக்கள் ஒன்றிணைந்து களமிறங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கரையை அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் 12 வயது மகன் பிரித்திவ் ராஜ் அங்குள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 4 மாதங்களுக்கு சளி, இருமலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்தடுத்த பரிசோதனையில் இருதயம் செயலிழந்ததை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று அறுவை சிகிச்சைக்கு 25 லட்சம் ரூபாய் தேவை என்ற நிலையி சிறுவனின் குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளனர் அவன் வசிக்கும் குரும்பம்பாளையம் கிராம மக்கள்.