பாஜக தலைமைக்கு எதிராக யாரும் போராட வேண்டாம்!: ஆதரவாளர்களுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா சூசகம்..!!

பெங்களூரு: பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு எதிராக யாரும் போராட வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சூசகமாக கூறியிருப்பதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக பாஜக-வில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனையால் முதலமைச்சர் எடியூரப்பா விரைவில் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது. லிங்காயத்து சமூக தலைவரான எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என்று அந்த சமுதாய மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லிங்காயத்து சமூக தலைவர்களின் ஆதரவை திரட்டி தனது வலிமையை காட்ட எடியூரப்பா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எடியூரப்பா ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் வரும் 26ம் தேதி பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தனக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி பாஜக தலைமைக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப வேண்டாம் என்று எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார். எவ்விதமான போராட்டத்திலோ அல்லது மரியாதை குறைவான செயல்களிலோ ஈடபட வேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related Stories: