டெல்லி பாஜ அலுவலகத்தில் தீ

புதுடெல்லி: டெல்லியில் பண்டித் பான்ட் மார்க் பகுதியில் பாஜ தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4.25மணியளவில் இந்த அலுவலகத்தில் தீப்பற்றியது. 3தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. துரிதமாக செயல்பட்டு சில நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. மின்கசிவு காரணமாகஇந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post டெல்லி பாஜ அலுவலகத்தில் தீ appeared first on Dinakaran.

Related Stories: