அண்ணாநகர்: கோயம்பேடு அடுத்த சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகர்(32). இவர் கடந்த 1ம் தேதி அண்ணாநகர் துணை ஆணையரிடம் அளித்த புகாரில், கடந்த மாதம் 28ம் தேதி சின்மயா நகரில் உள்ள ஏடிஎம் மையத்தில் எனது வைபை கார்டு மூலம் ரூ.1,500 எடுத்தேன். பின்னர் இயந்திரத்தில் இருந்து வைபை கார்டை எடுக்க மறந்து சென்றுவிட்டேன். அன்றைய தினமே எனது வைபை கார்டு மூலம் ரூ.25 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. என கூறியிருந்தார். இந்நிலையில், சைபர் கிரைம் போலீசார் மனோகர் பணம் எடுத்த இடத்தை டிராக் செய்தனர். அதில், கீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க்கில் ஸ்வைப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் விசாரித்தனர்.