தமிழகம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது விபத்து!: ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்..!! Jun 21, 2021 சாத்தூர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: சாத்தூர் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது விபத்து ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டியை அடுத்த கலைஞர் காலனி பகுதியில் சூர்யா என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகளை தயாரித்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல் காலையில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பட்டாசுகள் உராய்வு காரணமாக திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அருகில் இருந்த 4 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கலைஞர் காலனியை சேர்ந்த செல்வமணி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா?.. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு வைகோ கண்டனம்: வழக்கை விரைவுபடுத்தி உரிமையை நிலைநாட்ட அரசை வலியுறுத்தல்
திருமணத்திற்கு முன்பு காதலனால் கர்ப்பம்: தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்: ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக ஆவியாகும் தண்ணீர்: மொத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பதால் அக்டோபர் வரை சீரான குடிநீர் சப்ளை; பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை
காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி; 5 கிமீ தூரம் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி
5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் சுட்டது: காஞ்சிபுரம், திருத்தணியில் 108, சென்னையில் 105 டிகிரி பதிவானது
அதிமுக ஆட்சியில் காவிரி நீரை விவசாயத்திற்காக எடுக்க அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை இபிஎஸ், குடும்பத்திற்கு வழங்க அனுமதி: அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி மடிந்த தமிழர்களும் வணங்கத்தக்க வீரர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் அச்சம்; 7 அடி உயர கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை
எனது வீட்டில்கூட சிசிடிவி செயலிழந்தது கிடையாது தேர்தல் ஆணையத்திற்கு இது போதாத காலம்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி
விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு