ஆம்பூர் :ஆம்பூர் அருகே அரசு சுகாதார மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். ஆம்பூர் அடுத்த நரியம்பட்டில் அரசினர் சுகாதார மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையின் ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதை அப்புறப்படுத்த நோயாளிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.